யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!
யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பொருளில் ஏசியா 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏதாவது கப்பலில் இருந்து குறித்த பொருள் தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில், ஆகிய பகுதிகளில் பல்வேறு விதமான மர்ம பொருள்கள் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை