மறைந்த பாடகி பவதாரணிக்கு அஞ்சலி!

மறைந்த பிரபல தென்னிந்திய பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

‘இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தினால்‘ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது பவதாரணியின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலைஞர்கள் உட்பட  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

  

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.