கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் காயம்

தர்மபுரம் போலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (வியாழக்கிழமை) தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம்பொலிஸார் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேலை சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடிய பொழுது அவரை கைது செய்யும் நோக்கில் துரத்திச் சென்ற பொழுது மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் 37 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் அதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.