யாழில் ஆளுநர் செயலகத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சாவல்கட்டு மீனவர்கள்!

யாழ். சாவல்கட்டு மீனவர்கள், தங்களின் இறங்குத்துறை பிரச்சினைக்குத் தீர்வினைக் கோரி, யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்து  தமது பிரச்சனைகளைத்  தெரியப்படுத்திய சாவல்கட்டு மீனவர்கள், அதன்பின்னர்  வட மாகாண ஆளுநர் செயலகம்வரை பேரணியாக சென்று ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்தும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும்  ஆளுநர், செயலகத்தில் இல்லாத காரணத்தினால் குறித்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.