திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முசாரப் சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா அமைப்பினர் சந்திப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்)

சம்மாந்துறைக்கு அண்மையில் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவரும், முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம்.ஹனீபா, மஜ்லிஸ் அஸ்ஸூறா தலைவரும், முன்னாள் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான எம்.ஐ.எம்.அமீர் மற்றும் கிழக்கு மாகாண  வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.ஐ.எம்.றனூஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.சீ.எம்.சஹீல் உள்ளிட்ட அச்சபைகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.