வாழைச்சேனையில் மூவினத்தவர்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா தொற்று காரணமாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு வாழைச்சேனையில் இயங்கி வரும் றுக்சானா ஹோட்டல் & சதன் பேக்கர் உரிமையாளர் காமினி தர்மசிறி என்பவர் தனது சொந்த நிதியிலிருந்து 250 பேருக்கு இன்று (9) உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி மற்றும் றுக்சானா ஹோட்டல் & சதன் பேக்கர் நிறுவனத்தின் பொறுப்பாளர் எம்.எம்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.