சாவகச்சேரியில் ஊரடங்குவேளை கொள்ளை!
ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி, மண்டுவில் பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பான விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை