இளவாலை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

இளவாலைப் பகுதியில் 17 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய்தில் வைத்து வழங்கப்பட்டன.
 
வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் பா.மரியதாஸின் வேண்டுகோளுக்கிணங்க, வேலணை பிரதேசசபையின் வருமான வரிப் பரிசோதகர் லயன் சிகௌரீசனின் ஒழுங்கமைப்பில்  10 குடும்பங்களுக்கான பொருள்களை சிறி ஜூவல்லறி,  7 குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை சஞ்சீவன் தேவராசா ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
 
இந்த உலர் உணவுப் பொதிகளை வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான லயன் பா.மரியதாஸ், லயன் சி.ஹரிகரன் மற்றும் வேலணை பிரதேசசபையின் வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீசன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.