இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜயம்!
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தினரின் பணிகளைப் பாராட்டும் வகையில் குறித்த விஜயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைந்திருந்தது.
மாங்குளம் பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் படை வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
புத்தாண்டு விடுமுறை மற்றும் கொரோனா தொற்று காரணமாக படையினர் நீண்ட காலமாக வீடுகளுக்கு விடுமுறையில் செல்லாது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றமையைப் அவர் பாராட்டினார்.
இதேவேளை, இராணுவத்தினரின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலவற்றுக்கும் அவர் சென்றுள்ளதுடன் கிளிநொச்சி விஜயத்தை அடுத்து யாழ்ப்பாணம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை