தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதி விநியோகம்!

தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தைசெல்வாபுரம் பகுதிகளில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 10 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
 
இந்த உலர் உணவுப் பொதிகளை தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் வசிக்கும் சேவைநோக்கும் சமூக அக்கறையும் உடைய நல்லுள்ளம் படைத்த அன்பர் ஒருவர் அந்த வட்டாரத்தின் பிரதேசசபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரனிடம் வழங்கியிருந்தார்.
 
உலர் உணவுப் பொதிகளை வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான லயன் பா.மரியதாஸ், லயன் செ.விஜயராஜ், வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷன் ஆகியோர் துர்க்காபுரத்தில் அமைந்துள்ள பிரதேசசபை உறுப்பினரின் வதிவிடத்தில் வைத்து வழங்கிவைத்தனர்.
 
சில பயனாளிகளுக்கு அவர்களின் இல்லம் நாடிச் சென்று உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.