மாவையின் நிதியில் தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவு பொதிகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதியில் வலி.வடக்கு தெல்லிப்பழை பகுதியில் உள்ள துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் பகுதிகளைச் சேர்ந்த 60 குடும்பங்கபளுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் வட்டாரம் – 13 இன் உறுப்பினரும் தமிழ் சி.என்.என்., புதியசுதந்திரன் ஆகிய இணையத் தளங்களின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரனின் வேண்டுகோளுக்கமையவே நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான லயன் சி.ஹரிகரன், சே.கலையமுதன், லயன் செ.விஜயராஜ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணித் தலைவர் க.பிருந்தாபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.