சித்திரைப் புத்தாண்டையொட்டி பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை!
தமிழ் – சிங்களப் புத்தாண்டையொட்டி இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் கைதுசெய்யப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை