ஜேர்மன் நம்மவர் உணவகத்தால் யாழ்.மக்களுக்கு பாரிய உதவிகள்!

ஜேர்மன் நாட்டில் வாழும் நம்மவர் உணவகத்தால் கைதடி, மீசாலை, கீரிமலை, நகுலேஸ்வரம் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு ”நம்மக்களே நம் உறவுகள்” என்னும் தொனிப்பொருளில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

https://www.facebook.com/Tamilcnn/videos/861450597655028/?t=0

இந்த உலர் உணவுப் பொதிகள் சுமார் 3 ஆயிரம் ரூபா பெறுமதியானவை.

கீரிமலை, நகுலேஸ்வரம் ஆகிய பகுதிகளில் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் பா.மரியதாஸ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், வேலணை பிரதேசசபை வருமானவரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷன், நம்மவர் உணவகத்தின் இணைப்பாளர் பாலசூரியன் அகீசன் ஆகியோர் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.