தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து – எவருக்கும் பாதிப்பு இல்லை!
தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காலி – கொழும்பு பிரதான வீதியில் இன்று(செவ்வாய்கிழமை) விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை