ஊரடங்கு உத்தரவை மீறிய 26,600 பேர் கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரையான 25 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 26,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 6600 மேற்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்ய நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை​ 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.