கோகிலாக்கண்டி மக்களுக்கு உலர் உணவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தென்மராட்சியின்கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகளுக்கான அனுசரணையை லண்டன் மாநகரில் வசிக்கும் தாயக உறவுகள் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்ட – சமூக அக்கறையுடைய – சேவை நோக்குக் கொண்ட நல்லுள்ளம் படைத்த யாழ்.இந்துக் கல்லூரியின் 2008 ஆம் ஆண்டு உயர்தரம் கற்ற பழைய மாணவர் கஜன் என்பவர் வழங்கியுள்ளார்.

உலர் உணவுப் பொதிகளை வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணைய ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் சி.கௌரீஷன் ஆகியோர் கலந்து வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.