சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இப்போது நடைமுறையில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.