தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சுத்திகரிப்பாளர்களுக்கு உலர் உணவு !

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் 16 பேருக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுகாதாரத்துறையின் பங்கு – பணி – மிகவும் மகத்தானதாக விளங்குகின்றது. அந்தவகையில் வைத்தியசாலையில் தங்கிநின்று பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வைத்தியசாலையின் சுற்றுப்புறத்தை மிகவும் சிறப்பாக வைத்திருக்கும் இந்த பணியாளர்களும் போற்றுதற்குரியவர்கள். அவர்களின் தேவைகருதி இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகளைத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தள ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமாகிய லயன் பா.மரியதாஸ், நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினரும் வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகருமான லயன் சி.கௌரீஷன், வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.