ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிலருக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு!

நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவு செய்யப்படுவோருக்கு, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நலன் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு, உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அரச அலுவலங்களினால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய முன்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், வருமானத்தை இழந்துள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தொழிலை இழந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், ஊடகவியலாளர்கள் என பலர் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சிறு கைதொழில் துறையை சார்ந்தவர்கள் மற்றும் கட்டட நிர்மாணத்துறைக்கான சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி சுட்டிகாட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.