வலி.வடக்கு தவிசாளரின் நிதியில் குழமங்கால் மக்களுக்கு உலர் உணவு!

வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், தனது சொந்த நிதியில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் 75 குடும்பங்களுக்கு நேற்று உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா முன்னிலையில், தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான லயன் சி.ஹரிகரன், லயன் செ.விஜயராஜ், சே.கலையமுதன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவர் க.பிருந்தாபன், இளைஞர் அணி மானிப்பாய் தொகுதி செயலாளர் சி.கௌரீஷன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.