அராலி தெற்கு மக்களுக்கு சுமந்திரனால் உலர் உணவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நிதியில்அராலி தெற்குப் பகுதியில் சுயதொழில் மேற்கொள்ளும் 32 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அராலி தெற்கு வேலவன் சனசமூக நிலையத்தினர் , இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சி.கஜன் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே அந்த சனசமூக நிலையத்துக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை