கொழும்பில் கொரோனா பாதிப்பு 109 ஆக உயர்வு…

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 32 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கேகாலை மாவட்டத்தில் 03 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குருநாகல், மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், பொலனறுவை, திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய 10 மாவட்டங்களில் இன்னும் எவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

இதனிடையே தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 38 பேரும், வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று மாலை 4 மணிவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 303 ஆகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.