கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் தனது சொந்த உறவுகளுக்கு உலர் உணவு!

கனடாவில் உள்ள தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் தென்மராட்சிப் பகுதியில் மிகவும் வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக 120 உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகள் தென்மராட்சி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சுபச்செல்வனிடம் வழங்கிவைக்கப்பட்டன.

கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி  நிறுவனம் தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்திக்குப் பல்வேறு வகைகளிலும் உதவிகளை வழங்கி வருகின்றமையுடன் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.