அளவெட்டியில் 211 குடும்பங்களுக்கு தமிழரசால் உலர் உணவு பொதிகள்!

அளவெட்டி தெற்கு, மேற்கு, மத்தி, வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவிலுள்ள நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் இழந்த211 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் கந்தசாமி மயூரதனின் வேண்டுகோளுக்கமைவாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்  ஆலங்குளாய் சிவராஜா கஜனின் ஒழுங்கமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி உதவியில் 50 குடும்பங்களுக்கும் மற்றும் வடக்கு மாகாண அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்தின் நிதியுதவியில் 50 குடும்பங்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் நிதியுதவியில் 2 ஆம் கட்டமாக 35 குடும்பங்களுக்கும் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

76 குடும்பங்களுக்கு பிரதேசசபை உறுப்பினர் க.மயூரதன் தனது சொந்த நிதியில் உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளார்.

இந்த உலர் உணவுப் பொதிகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், சே.கலையமுதன், இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணித் தலைவர் க.பிருந்தாபன் ஆகியோர் கலந்து வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.