சலூன்கள், அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூட அரசு உத்தரவு

இலங்கையிலுள்ள சலூன்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவில் நடமாடுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.