பேலியகொடவில் பரிசோதிக்கப்பட்ட 529 பேருக்கு தொற்று இல்லை

பேலியகொட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொரோனா வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும், குறித்த அனைவரும் தொற்றுக்கு இலக்காகவில்லையென, பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறித்த மீன் வியாபாரி ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொரோனா வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.