வவுனியாவில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் மரணம்!!

வவுனியாநிருபர்

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாரதிபுரம் வீதியில் தற்காலிகமாக வசிக்கும் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்து இரவு தங்குவதற்காக கற்பகபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மன்னார் பிரதான வீதிக்கு அண்மித்ததாக பாரதிபுரம் வீதியின் ஓரமாக பேராறு நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றில் துவிச்சக்கர வண்டியுடன் வீழ்ந்து, குழியில் இருந்த நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

இன்று (25.04.2020) காலை வீதியால் சென்றவர்கள் குறித்த குழியில் ஒருவர் வீழ்ந்து இறந்து கிடப்பதை அவதானித்து வவுனியா பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதில் ஜெயபத்ம புலேந்திரன் என்ற 68 வயதுடைய நபரே மரணமடைந்தவராவார்.

நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த அசம்பாவிதம் இடம்பெற காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.