இதுவரை 95 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 477 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.