பெண்ணொருவரை மாவட்டம் விட்டு மாவட்டம் அழைத்துவந்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்!

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த விடயம் தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மானிப்பாயைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவர் அழைத்து வந்ததாகக் கூறப்படும் பெண்ணும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அந்தப் பெண் கொரோனா அபாய வலயமான புத்தளத்திலிருந்து கடல் வழியாக படகுமூலம் மன்னாருக்கு வருகைதந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரால் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.