சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது…

(க.கிஷாந்தன்)

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவரை டயகம பொலிஸார் இன்று (27.04.2020) கைது செய்துள்ளனர்.

அத்துடன் விற்பனைக்காக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த  சாராய போத்தல்கள் (2) மற்றும் பியர் டின்களும் (40) கைப்பற்றப்பட்டுள்ளன.

டயகம தோட்டத்தில், கொலனி பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இவ்வாறு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பியர் டின்னொன்று 1000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதானவர்களை நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என டயகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.