காணி தகராறு நீண்டு கொண்டு சென்றதன் காரணமாக குடும்பஸ்தர் படுகொலை!


இபலோகம, சேனபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை காணி சம்பந்தமான தகராறு நீண்டு கொண்டு சென்றதன் காரணமாக, கூரிய ஆயுதமொன்றால் நபரொருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர் சேனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அதேயிடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.