மேலும் 03 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 622 ஆனது

மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது 481 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 134 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.