அம்பாறையில் 3ஆக உயர்ந்தது கொரோனாத் தொற்றாளர்கள்! – கண்டியிலும் 13 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 21 மாவட்டங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாவட்டங்களின் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய தொற்றாளர் எண்ணிக்கை அம்பாறை மாவட்டத்தில் 03ஆகவும், கண்டி மாவட்டத்தில் 13 ஆகவும், அநுராதபுரம் மாவட்டத்தில் 12ஆகவும் அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 155 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 63 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 47 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் 41 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 20 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், , கேகாலை மற்றும் இரத்தனபுரி மாவட்டங்களில் தலா 08 பேர் வீதமும், மொனராகலை மாவட்டத்தில் 4 பேரும், பதுளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 03 பேர் வீதமும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பொலனறுவை, மாத்தளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 41 பேரும், இலங்கை வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும், வெலிசறை கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 170 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.