தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

ஊடகவியலாளர்  தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்தும், மெழுவர்த்தி ஏத்தியும் மலர்தூபியும் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின் ஊடகவியலாளர்களான சு.வரதகுமார், ந.கபிலநாத் ஆகியோரினால் நினைவு உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது, தராக்கி சிவராம் கொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை எனவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு  நீதி கிடைக்கும் வகையில் நீதியான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஊடகவியலாளர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.