விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி

விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை பெற்றுவரும் மற்றும் தேசிய விளையாட்டுக் குழாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில், விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.