தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழிவடையும் அபாயமுள்ளதாக தெரிவிப்பு!

மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் புராதன ஓவியங்களுடன் கூடிய அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் நாளொன்றில் 4 மணித்தியாலங்களுக்கு திறந்து வைக்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் புராதன ஓவியங்களுடன் கூடிய மூவாயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளதாகவும் அவை தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால் பெறுமதி மிக்க ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.