கொரோனா தொற்றுக்குள்ளான 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையினர்!

கடந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இவர்களில் 136 பேர் முழுயாக குணமடைந்துள்ளதுடன், 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.