முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசேட கூட்டமொன்றுக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பிரதமரினால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.