665 ஆக எகிறியது கொரோனா…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 504 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 187 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.