மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் அருண ஜெயசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், டெங்கு பரவக்கூடிய மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுபாட்டு செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 18 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.