ஜுன் 20ஆம் திகதி தேர்தல் வேண்டாம் – உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, எதிர்வரும் ஜுன் 20 ஆம் திகதியன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்தா மைத்ரி குணரத்ன இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளர், சட்ட மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணையாளரால் கடந்த 20ஆம் திகதி வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு அரசமைப்புக்கு முரணானது என்பதால் அதனை இரத்துச் செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் தேர்தலை நடத்தாமல் விடுக்கப்பட்ட தேர்தல் புதிய திகதி அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.