ஜேர்மன் நம்மவர் உணவகத்தினால் தெல்லிப்பழையில் உதவித் திட்டம்!

ஜேர்மன் நம்மவர் உணவகத்தின் அனுசரணையில் ஆகீசன், கௌரீசன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் தெல்லிப்பழையில் துர்க்காபுரம், தந்தை செல்வா புரம் பகுதிகளில் உள்ள 23 குடும்பங்களுக்கு தலா சுமார் 2 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்தப் பொருள்களை வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என், புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜ், இலங்கைத் தமிழரசுக் கட்சி மானிப்பாய் தொகுதி இளைஞர் அணி செயலாளரும் வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகருமான லயன் சி.கௌரீசன், ஜேர்மன் நம்மவர் உணவகத்தின் யாழ் இணைப்பாளர் ஆகீசன் ஆகியோர் பங்குபற்றி வழங்கிவைத்தனர்.

`

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.