முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மற்றுமொருவருக்கு கொரோனா!

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்றுள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஜாஎலயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கு நேற்று கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று மற்றொருவருக்கும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.