முல்லைத்தீவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழப்பு – கொரோனா என சந்தேகம்!

குணசிங்கபுரவிலிருந்து முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் நேற் அதிகாலையும் மற்றொருவர் நேற்று மாலை உயிரிழந்தனர் என்றும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.

அந்தவகையில் தற்போது பி.சி.ஆர் சோதனைகள் இடம்பெறுவதாகவும் அதன் முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியாகலாம் என்றும் விமானப்படை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 2 பேரும் வீடற்றவர்கள் என்றும் அவர்கள் சில வாரங்களுக்கு முன்பு கொழும்பிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இருவரும் மிகவும் வயதானவர்கள் என்று நம்பப்படுகிறது, மேலும் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.