கொரோனா வைரஸ் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலவரம்

கொரோனோ தொற்று தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்களை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

அதன்படி இதுவரை கொரோனா தொற்றுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 என்றும் 05 பேர் சந்தேகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என வெளியேறியவர்கள் எண்ணிக்கை 170 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வெளியே 661 பேர் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பரிசோதனையின் பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதுவரை 09 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.