30 வைத்தியசாலைகளில் 172 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

179 பேர் 30 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்து 07 பேரும், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலிருந்து 07 பேரும், இரணவில வைத்தியசாலையிலிருந்து ஒருவரும் குணமடைந்துள்ளனர்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 690 பேரில் தற்போது 511 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள வைத்தியசாலையில் 140 பேரும், கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 133 பேரும், கொழும்பு கிழக்கு முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 78 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 பேரும், பொலனறுவை வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் 51 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 33 பேரும், இரணவில வைத்தியசாலையில் 17 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.