தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்து தேர்தல் ஆணைக்குழு அண்மையில் வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி சரித குணரத்னவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக தேர்தல் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி என் ஜே. அபேசேகர, பேராசிரியர் ரட்னஜீவ ஹூல் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.