லண்டன், மெல்பர்னிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவை

லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ஸ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ஸ்ரீலங்கன் விமான சேவை தற்போது தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், இன்று, நாளை மற்றும் எதிர்வரும் 05 ஆம் திகதிகளில் விசேட விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

லண்டனில் இருந்து மூன்று விமான சேவைகளும் மெல்பர்னில் இருந்து ஒரு விமான சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் 5 ஆம் திகதி வரை லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி மூன்று விமானங்கள் பயணிக்கவுள்ளன.

அதற்கிணங்க, மே 8 ஆம் திகதி மெல்பர்னில் இருந்து கொழும்பு நோக்கி ஒரு விமானம் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.