21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு எதிர்வரும் 6 ஆம் திகதிவரை வரும் மூன்று நாட்களுக்கு இதேபோன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு மீண்டும் அன்றைய நாளில் இரவு 8 மணிக்கு அமுல்பட்டுத்தப்படவுள்ளது.

இதேவேளை, 21 மாவட்டங்களில் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம், ஊரடங்கு சட்டம் இருக்கும் நிலையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரவும் நிறுவனங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.