அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை குறித்த தெளிவுபடுத்தல் வெளியானது!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பிரவேசிக்கவோ அல்லது வெளிசெல்லவோ அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில், அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.